fbpx

ஆயுள் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட மூளை மற்றும் மனநல பராமரிப்பின் மூலம், நரம்பியல் மனநல மருத்துவத்தை மேம்படுத்துகிறோம்.

உங்களைப் பராமரிக்க, பலதரப்பட்ட குழுவினரை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதே முதல் படி என்பதை உறுதியாக நம்புகிறோம். சிறப்பான செயல்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் குழு ஒருங்கிணைந்து இயங்க வேண்டும் . பல ஆண்டுகள் மிகுந்த சிரத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், விடாமுயற்சியுடன் உருவாக்கப்பட்ட, எங்கள் தனித்துவமான உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறை இங்கு நடைமுறைக்கு வருகிறது.
Play Video

நாங்கள் முழுமையான மூளை மற்றும் மனநல பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள்

புத்தியில், மூளையை தூண்டுதல் முதல் உளவியல் சிகிச்சை வரை, ஆயுர்வேதா முதல் யோகா வரை, அறிவாற்றலைத் தூண்டுதல் முதல் இயற்கை மருத்துவம் வரை, உடல் ரீதியான சிகிச்சை, செயல்முறை மருத்துவம் மற்றும் பேச்சு சிகிச்சை போன்ற ஒவ்வொரு சிறப்பான சேவைகளையும் ஒன்றாக வழங்கும் கலப்பு சிகிச்சைமுறைக்கான விரிவான திட்டத்தை நாங்கள் வழங்குகிறோம்.வீட்டு பராமரிப்பு, மருத்துவமனை மற்றும் ஆன்லைன் சிகிச்சை முறைகள் மூலம் புத்தியின் சேவைகளைப் பெறுங்கள்

குழந்தைகளுக்கான புத்தி மருத்துவம்

குழந்தைகளுக்கு நரம்பியல் மனநல கோளாறுகள் ADHD,ஆட்டிஸ சிதறல் கோளாறு, வலிப்பு நோய், பெருமூளை வாதம் மற்றும் அறிவுசார் இயலாமை போன்ற தீவிரமான பிரச்சனைகள் முதல் விரக்தி, மனச்சோர்வு, தலை யில் காயம் ஏற்பட்ட பின் உள்ள நிலைமைகள் போன்ற சாதாரண பாதிப்புகள் வரை இருக்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு, மறுவாழ்வும் புத்துயிரும் பெற்று, புதிய துவக்கத்தைப் பெறக்கூடிய விரிவான திட்டத்தை அந்த குழந்தையும் குடும்பமும் பெறுவதை “மருந்துகளுக்கு அப்பாற்பட்டது” என்னும் எங்களுடைய ஒருங்கிணைந்த அணுகுமுறை உறுதிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்ப பராமரிப்பாளர்களுக்கு தேவையான உதவியும் வழிகாட்டலும் கூட, முறையான திட்டமாக எங்கள் பராமரிப்பு செயல்முறையில் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது. புத்தி மருத்துவமனை பாதிக்கப்பட்ட குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுவதற்காக, அக்குழந்தையின் கல்வி நிறுவனத்துடனும் (பள்ளிக்கூடம், சிறப்பு பள்ளி, இளையோர் கல்லூரி, தொழிற்கல்வி மையம்) செயலாற்றுகிறது.

இளைஞர்களுக்கான புத்தி மருத்துவம்

இளைஞர்களுக்குள்ள நரம்பியல் மனநல கோளாறுகள், இதுவரை அறியப்படாத கவனக்குறைவு கோளாறு அல்லது மற்றவர்களுடன் பழகுவதில் கோளாறு; வாழ்க்கை மாற்றத்துடன் தொடர்புடைய மனோபாவத்தின் தனித்தன்மைகள் (குழந்தைபருவத்தில் இருந்து இளம்பருவத்துக்கு மாறுதல்); கல்வி சார்ந்த அழுத்தங்கள், பள்ளிக்கூடம் அல்லது கல்லூரியில் துன்புறுத்தப்படுதல், உறவு சார்ந்த பிரச்சனைகள் உட்பட சுற்றுசூழலினால் ஏற்படும் மன அழுத்தங்களுக்கு, விரக்தி, மனநிலை அலைபாய்தல், மிகை உணர்ச்சி மற்றும் உறவுகளிடம் கொந்தளிப்பது போன்ற எதிர்வினையாற்றுதல் போன்ற பிரச்சனைகளுக்கு புத்தியில், அவர்களது தனித்துவமான உயிர்-மனம்-சமூக ரீதியான தேவைகளுக்காக மருந்துகளுக்கு அப்பாற்பட்ட விரிவான பராமரிப்பு அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டு, பிற்காலத்துக்கு அவர்கள் தயார் செய்யப்படுவர். மேலும், எங்கள் தனித்துவமான பல நுண்ணறிவு மற்றும் நேர்மறையான உளவியல் அணுகுமுறை, இளைஞர்களுக்கு அவர்கள் மேற்படிப்பு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பற்றிய தெளிவைக் கொடுக்கிறது.

பெரியவர்களுக்கான புத்தி மருத்துவம்

பெரியவர்களுள் நரம்பியல் மனநல கோளாறுகள், உயிரியல் மற்றும் பல உளவியல் சமூக ரீதியான காரணிகளால் ஏற்படலாம். வலிப்பு நோய், தலை காயம், மூளை கட்டிகள், தலை வலி மற்றும் வலி நோய்குறிகள், பார்க்கின்சன் மற்றும் பிற இயக்க கோளாறுகள் போன்ற நரம்பியல் பிரச்சனைகள் உள்ள பெரியவர்களில் நினைவாற்றல், மனநிலை மற்றும் விரக்தி பிரச்சனைகள் இருக்கும். மறுபுறம், விரக்தி மற்றும் ஃபோபிக் நிலைகள், இருமுனை மனநிலை கோளாறுகள், மன அழுத்தம், வெறித்தனமாய் கட்டாயப்படுத்தும் கோளாறு மற்றும் மனநோய் போன்ற, பெரியவர்களுக்கு ஏற்படும் மனநல பிரச்சனைகளுக்கு தனித்துவத்துவமான மனநல தேவைகள் இருக்கின்றன. விளக்கமுடியாத மருத்துவ அறிகுறிகள், ஃபைப்ரோமியால்ஜியா, நாள்பட்ட வலி முதலிய பிரச்சனைகளை உடைய நோயாளிகளுக்கான தீர்வுகள் இன்னும் கிடையாமல் இருக்கின்றன. எங்கள் விரிவான பராமரிப்பு அணுகுமுறை மருந்துகளுக்கு அப்பாற்பட்டு, அன்றாட வாழ்வின் செயல்பாடுகளை மீண்டும் செய்யவும், சிறப்பான வாழ்க்கை தரத்தைக் கொடுக்கவும் உதவுகிறது.

முதியோருக்கான புத்தி மருத்துவம்

முதியோரில் நரம்பியல் மனநல கோளாறுகள், வழக்கமாக மறதி நோய், பார்கின்சன் நோய் மற்றும் பிற இயக்க கோளாறுகள், மூளைக்கான வழித்தடங்களை துண்டித்து, சிறிய வாதங்களை ஏற்படுத்தும் முற்போக்கான செரிப்ரோவாஸ்குலர் நோய், போன்ற மூளைச் சிதைவு நோய்கள் மூலம் ஏற்படுகின்றது. ஆரோக்கிய குறைவு, இயலாமை, நேசித்தவரை இழப்பது மற்றும் தனிமை போன்ற சூழ்நிலைகளிலும் முதியோர் மனநல பாதிப்படைகின்றனர். நினைவாற்றல் இழப்பு, மனநிலை கோளாறுகள், விரக்தி, மனோபாவத்தின் தனித்தன்மைகள் மற்றும் தீவிர நரம்பியல் கோளாறுகள், மூளை முதுமையடைவதால் ஏற்படும். எங்கள் இடைநிலை அணுகுமுறை, மருந்துகளுக்கு அப்பாற்பட்டு, நவீன அறிவியல் மற்றும் பண்டைய ஞானத்தின் சிறப்புகளை ஒன்றிணைத்து, ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்துவமான திட்டங்களை உருவாக்குகிறது,

நாங்கள் முழுமையான மூளை மற்றும் மனநல பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள்

மூளையை தூண்டுதல் முதல் உளவியல் சிகிச்சை வரை, ஆயுர்வேதா முதல் யோகா வரை, அறிவாற்றலை தூண்டுதல் முதல் இயற்கை மருத்துவம் வரை, உடல் ரீதியான சிகிச்சை, செயல்முறை மருத்துவம் மற்றும் பேச்சு சிகிச்சை போன்ற ஒவ்வொரு சிறப்பான சேவைகளையும் ஒன்றாக வழங்கும் கலப்பு சிகிச்சைமுறைக்கான விரிவான திட்டத்தை நாங்கள் வழங்குகிறோம்.

நமது கிளைகள்

புத்தி மருத்துவமனை

தேனாம்பேட்டை, சென்னை

புத்தி மருத்துவமனையில், எங்கள் நோயாளிகளுடன் வெளிப்படையான தொடர்பில் இருந்து, உங்களுக்கு இருக்கும் எந்த கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறோம். எங்களுடன் தொடர்பில் இருக்க, பின்வரும் தொடர்பு தகவல்களை பயன்படுத்தவும்.

முகவரி

கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு 600018

தொலைபேசி எண்

+91.9500010056

புத்தி மருத்துவமனை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கோயம்புத்தூர்

புத்தி மருத்துவமனையில், எங்கள் நோயாளிகளுடன் வெளிப்படையான தொடர்பில் இருந்து, உங்களுக்கு இருக்கும் எந்த கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறோம். எங்களுடன் தொடர்பில் இருக்க, பின்வரும் தொடர்பு தகவல்களை பயன்படுத்தவும்.

முகவரி

395, சரோஜினி நாயுடு சாலை, சித்தாபுதூர், பாலசுந்தரம் லேஅவுட், பி.கே.ஆர் நகர், கோயம்புத்தூர், தமிழ்நாடு 641044

தொலைபேசி எண்

+91.9500010056

Appointments
at Buddhi Clinic

We'll ask for some basic information to assess your care needs.